இந்தியா

தெலுங்கானாவில் அதிசய சம்பவம் ஒரே முட்டையில் 2 கோழி குஞ்சுகள்

Published On 2024-12-24 10:18 IST   |   Update On 2024-12-24 10:18:00 IST
  • அதிசய சம்பவம் ஊர் முழுவதும் பரவியது.
  • ஏராளமான மக்கள் அதிசய கோழிக்குஞ்சுகளை பார்த்து செல்கின்றனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம், போத் மண்டலத்தை சேர்ந்தவர் ஷேக் தவ்பிக். இவர் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.

இதில் ஒரு கோழி முட்டைகளை அடைகாத்து வந்தது. அடைகாக்கப்பட்ட ஒரு முட்டையில் இருந்து நேற்று 2 கோழிக்குஞ்சுகள் வந்தது. 2 கோழிக்குஞ்சுகளும் தற்போது நலமாக உள்ளது. இந்த அதிசய சம்பவம் ஊர் முழுவதும் பரவியது. ஏராளமான மக்கள் அதிசய கோழிக்குஞ்சுகளை பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து கால்நடைத்துறை டாக்டர் ஒருவர் கூறுகையில்:-

மரபணு குறைபாடு காரணமாக ஒரே முட்டையில் 2 கோழி குஞ்சுகள் பொறித்துள்ளது என்றார்.

Tags:    

Similar News