இந்தியா

சத்தீஸ்கரில் மின்வாரிய அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து- டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறின

Published On 2024-04-05 10:33 GMT   |   Update On 2024-04-05 10:33 GMT
  • பலத்த காற்று காரணமாக தீ தொடர்ந்து பரவி வருகிறது.
  • தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பாரத் மாதா சவுக் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாக தீ தொடர்ந்து பரவி வருகிறது. மேலும், தீ விபத்தால் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறியது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News