இந்தியா

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணை 'புஷ்பக்'- வெற்றிகரமாக தரையிறக்கியது இஸ்ரோ

Published On 2024-03-22 06:01 GMT   |   Update On 2024-03-22 06:01 GMT
  • விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சுமார் 4.5 கி.மீ உயரத்திற்கு ஏவுகணையை கொண்டு செல்லப்பட்டது.
  • ஆர்எல்வி-ன் மூன்றாவது தரையிறங்கும் மிஷனாகும்.

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணையான புஷ்பக் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

கர்நாடகாவின் சல்லகெரேவில் உள்ள ஏரோநாட்டிகல் சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் இஸ்ரோவால் ராக்கெட் ஏவப்பட்டது.

இது ஆர்எல்வி-ன் மூன்றாவது தரையிறங்கும் மிஷனாகும்.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சுமார் 4.5 கி.மீ உயரத்திற்கு ஏவுகணையை கொண்டு செல்லப்பட்டு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட பெட்டி அளவுருக்களை அடைந்த பின்னர் விடுவிக்கப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

Tags:    

Similar News