ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? - அமித் ஷா விளக்கம்
- எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை
ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இத்தனிடையே, முன்னாள் குடியரசு தினை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமித் ஷா, "தன்கர் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது அரசிலமைப்பின் படி சிறப்பாக பணியாற்றினார். மருத்துவக் காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். இதில் தேவையற்ற ஆராய்ச்சிகளை செய்து, ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என நினைப்பது தவறு" என்று தெரிவித்தார்.