இந்தியா

புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் திரும்பிய விமானம்: காரணம் இதுதான்

Published On 2024-02-09 07:07 GMT   |   Update On 2024-02-09 07:07 GMT
  • டெல்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது.
  • விமானத்தில் திடீரென துர்நாற்றம் வீசியதால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது விமானத்திற்குள் திடீரென துர்நாற்றம் வீசியது.

இதனால் பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் டெல்லியில் தரையிறக்க அனுமதிக்கும்படி விமானி கேட்டுக் கொண்டார். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.

இதுதொடர்பாக, விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் சில நிமிடம் துர்நாற்றம் வீசியதால் முன் எச்சரிக்கையாக, விமானி மீண்டும் டெல்லியில் தரையிறக்கினார். அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துர்நாற்றம் காரணமாக புறப்பட்ட இடத்துக்கே விமானம் திரும்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News