இந்தியா

போன வேகத்தில் திரும்பி வந்தது.. மத்திய மந்திரி சென்ற இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

Published On 2023-06-04 14:53 GMT   |   Update On 2023-06-04 14:53 GMT
  • மத்திய இணை மந்திரி ராமேஸ்வர் டெலி, திப்துகர் எம்எல்ஏ பிரசாந்த புகான் உள்ளிட்ட பலர் பயணம் மேற்கொண்டனர்.
  • விமானம் டேக் ஆப் ஆகி வானில் பறக்கத் தொடங்கியபோது, இயந்திரத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதை விமானி கண்டறிந்தார்.

அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து திப்ருகர் நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை மந்திரி ராமேஸ்வர் டெலி, திப்துகர் எம்எல்ஏ பிரசாந்த புகான், துலியாஜன் தொகுதி எம்எல்ஏ தெராஸ் கோவல்லா உள்ளிட்ட பலர் பயணம் மேற்கொண்டனர்.

விமானம் டேக் ஆப் ஆகி வானில் பறக்கத் தொடங்கியபோது, இயந்திரத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து மீண்டும் கவுகாத்தி விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பினார். விமான நிலையத்தை தொடர்புகொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட 12 நிமிடத்தில் விமானம் திரும்பி வந்த நிலையில், பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News