இந்தியா
பாகிஸ்தானில் இருந்து கடத்தி வந்த ரூ.360 கோடி ஹெராயின் பறிமுதல் - குஜராத் போலீசார் அதிரடி
- பாகிஸ்தானில் இருந்து கடத்தி வந்த 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட்டது.
- ஹெராயினும், படகையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடலோர காவல்படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு படகை தடுத்து சோதனை செய்தனர்.
அப்போது அதில் 50 கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் படகில் இருந்த 6 பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த படகு பாகிஸ்தானை சேர்ந்த அல்சாகர் படகு என்பதும் அங்கிருந்து ஹெராயினை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 50 கிலோ ஹெராயினும், படகையும் பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த ஊழியர்களையும் விசாரணைக்காக ஜாகாவ் துறைமுகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.360 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.