இந்தியா

போர், வன்முறையை இந்தியா ஆதரிக்காது: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

Published On 2022-12-04 03:00 GMT   |   Update On 2022-12-04 03:00 GMT
  • பகவத் கீதையின் உள்ளடக்கம், உலகளாவியதாக உள்ளது.
  • இந்தியா அமைதியை தான் விரும்புகிறது.

பெங்களூரு :

பெங்களூரு இஸ்கான் கோவில் நிர்வாகம் சார்பில் தேசிய பகவத் கீதை ஜெயந்தியை முன்னிட்டு பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட பகவத்கீதை நூல் வெளியீட்டு விழா வசந்தபுராவில் உள்ள ராஜாதிராஜ கோவிந்தன் கோவிலில் வைத்து நேற்று நடைபெற்றது.

இதில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பல மொழிகளில தயாரிக்கப்பட்ட பகவத்கீதை நூலை வெளியிட்டு பேசியதாவது:-

குருசேஷத்திர போர்க்களத்தில் தான் பகவான் கிருஷ்ணர் காவிய விரிவுரையை நிகழ்த்தினார். இது பகவத் கீதை என்று நம்மால் அறியப்பட்டது. பகவத் கீதையின் உள்ளடக்கம், உலகளாவியதாக உள்ளது. பகவத் கீதையை படிப்பதும், அதை வாழ்க்கையில் உள் வாங்வதும் ஒரு நபரை அச்சமின்றி வாழ வழிகாட்டுகிறது.

போர், வன்முறையை இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது. இந்தியா அதனை விரும்புவதும் இல்லை. அமைதியை தான் விரும்புகிறது. என்றாலும், அநீதி மற்றும் ஒடுக்கு முறைக்கு நடுநிலையாக இருக்க முடியாது. அநீதி மற்றும் அடக்கு முறைக்கு நடுநிலையாக இருப்பது நமது இந்தியாவின் இயல்பு கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் மற்றும் இஸ்கான் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News