இந்தியா

3-வது கட்டமாக நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Published On 2025-02-17 11:03 IST   |   Update On 2025-02-17 11:03:00 IST
  • அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வெளியே வந்த அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் பேருந்தில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது. அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

இதற்கிடையே, 2-வது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியது. இவர்கள் நேற்று முன்தினம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

நேற்று மூன்றாவது கட்டமாக மேலும் 112 இந்தியர்களை நாடு கடத்தியது. இவர்கள் நேற்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 44 பேர் அரியானா மாநிலத்தையும், 33 பேர் குஜராத் மாநிலத்தையும், 2 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா ஒருவர் இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

3-வது கட்டமாக நேற்று அமிர்தசரஸ் வந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வெளியே வந்த அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் பேருந்தில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

இதுதொடர்பாக, அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாவ்னி கூறுகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்ததாகக் கூறப்படும் இந்தியர்களின் 3வது குழு நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர். நேற்று வந்த விமானத்தில் 112 பேர் வந்தனர்.

அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் டயப்பர்கள் என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் வழங்கினோம். எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்து இருந்தோம். அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News