இந்தியா

திருமண விழாவில் வெடித்த ராட்சத பலூன்... சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்

Published On 2025-11-25 08:49 IST   |   Update On 2025-11-25 08:49:00 IST
  • உறவினர், நண்பர்கள் புடைசூழ ஆரவாரமாக திருமணங்கள் நடைபெறுகின்றன.
  • திருமணத்துக்கு முந்தைய சடங்கில் மணமக்கள் ராட்சத பலூனை கையில் ஏந்திக் கொண்டு நடந்து சென்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கருதப்படுகிறது. எனவே இதனை ஒவ்வொருவரும் திருவிழா போல கொண்டாடுகின்றனர். இதனால் உறவினர், நண்பர்கள் புடைசூழ ஆரவாரமாக திருமணங்கள் நடைபெறுகின்றன. அதிலும் இளைய தலைமுறையினர் தற்போது விதவிதமாக திருமண கொண்டாட்டத்தை நடத்த விரும்புகின்றனர்.

அந்தவகையில், திருமணத்துக்கு முந்தைய சடங்கில் மணமக்கள் ராட்சத பலூனை கையில் ஏந்திக் கொண்டு நடந்து சென்றனர். பின்னர் விளையாட்டு துப்பாக்கியால் நண்பர்கள் அதனை சுட்டனர். அப்போது அந்த பலூன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது. இதில் மணமக்கள் காயம் அடைந்தனர். இதனால் மகிழ்ச்சி நிறைந்த திருமண கொண்டாட்டம் சோகத்துடன் முடிந்தது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News