இந்தியா

கூட்டணியில் குழப்பம்: பீகார் தேர்தலைப் புறக்கணித்தது ஹேமந்த் சோரன் கட்சி

Published On 2025-10-22 03:16 IST   |   Update On 2025-10-22 03:16:00 IST
  • பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
  • என்.டி.ஏ. கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

பாட்னா:

பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி-காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.

இதற்கிடையே, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட முடிவு செய்து 6 இடங்களில் போட்டியிடும் என அறிவித்தது.

இந்நிலையில், இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஜே.எம்.எம். இந்த முடிவை எடுத்துள்ளது.

Tags:    

Similar News