இந்தியா

தேசத்துரோகம் சட்டம்: கலந்து ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும்- மத்திய அமைச்சர்

Published On 2023-06-02 14:28 GMT   |   Update On 2023-06-02 14:28 GMT
  • 3 முதல் 7 வருடம் வரை சிறைத்தண்டனை வழங்க பரிந்துரை
  • நாடாளுமன்ற தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் மீது பயன்படுத்த திட்டம் என காங்கிரஸ் விமர்சனம்

தேசத்துரோகம் குறித்து சட்ட கமிஷன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் தேசத்துரோகம் வழக்கில் குறைந்தபட்ச தண்டனை 3 வருடத்தில் இருந்து 7 வருடம் என பரிந்துரை செய்துள்ளது.

பா.ஜனதா அரசு தேசத்துரோக சட்டத்தை மேலும் கொடூரமானதாக்க முயற்சி மேற்கொள்வதாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் மீது பயன்படுத்தப்படும் என்ற செய்தியை கொடுப்பதாக இருக்கிறது எனவும், கருத்து வேறுபாடுகளை அடக்குதல், அடிபணியச் செய்தல் மற்றும் அமைதிப்படுத்துதல் ஆகியவற்றிற்கான முக்கிய ஆயுதம் எனவும் காங்கிரஸ் கட்சி தனது விமர்சனத்தை வெளிப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ''தேசத்துரோகம் குறித்த சட்ட கமிஷன் அறிக்கை விரிவான ஆலோசனைச் செயல்பாட்டின் படிகளில் ஒன்றாகும். இப்போது நாங்கள் அறிக்கையைப் பெற்றுள்ளோம், நாங்கள் கலந்து ஆலோசிப்போம். ஆலோசனைகளின் கருத்துகளை பெற்று பொது நலனுக்கான நியாயமான முடிவை எடுப்போம்'' என்றார்.

Tags:    

Similar News