இந்தியா

தாஜ்மகாலை குடும்பத்துடன் பார்வையிட்ட ரிஷி சுனக்: விருந்தோம்பலுக்கு நன்றி

Published On 2025-02-16 03:56 IST   |   Update On 2025-02-16 04:00:00 IST
  • இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆக்ராவுக்கு 2 நாள் பயணம் வந்துள்ளார்.
  • ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் சென்றார்.

லக்னோ:

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆக்ராவுக்கு இரண்டு நாள் பயணம் வந்துள்ளார்.

இந்நிலையில், ரிஷி சுனக் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு நேற்று தனது குடும்பத்தினருடன் சென்றார். தாஜ்மகாலைப் பார்வையிட்ட அவர், அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் கருத்துகளை பதிவிட்டார்.

ரிஷி சுனக்குடன் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி, மகள்கள் மற்றும் மாமியார் சுதா மூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர்.

இதுதொடர்பாக, ரிஷி சுனக் கூறுகையில், தாஜ்மகாலைப் போல உலகின் சில இடங்கள் ஒன்றிணைக்க முடியும். இதைப் பார்க்கும் குழந்தைகள் மறக்க மாட்டார்கள். அன்பான விருந்தோம்பலுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் முழு குடும்பத்திற்கும் மறக்க முடியாத அனுபவம், நன்றி என தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் வருகையை முன்னிட்டு உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News