இந்தியா

அமரிந்தர் சிங், பிரதமர் மோடி

பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங் அடுத்த வாரம் பா.ஜ.க.வில் இணைகிறார்

Published On 2022-09-16 17:51 GMT   |   Update On 2022-09-16 17:51 GMT
  • பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரிந்தர் சிங்.
  • இவர் அடுத்த வாரம் பா.ஜ.க.வில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சண்டிகர்:

பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரிந்தர் சிங்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அமரிந்தர் சிங், உட்கட்சி மோதலால் காங்கிரசில் இருந்து விலகி லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கினார். அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார்.

இந்நிலையில், அமரிந்தர் சிங் அடுத்த வாரம் பா.ஜ.க.வில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News