இந்தியா

தெலுங்கானா சட்டசபை தேர்தல் - முன்னாள் எம்.பி. பா.ஜ.க.வில் இருந்து விலக இதுதான் காரணம்

Published On 2023-11-01 12:42 IST   |   Update On 2023-11-01 13:38:00 IST
  • தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
  • அங்கு ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத் ராஷ்டிரிய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி, சென்னூர் தொகுதியில் தனது மகன் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கோரிக்கையை பா.ஜ.க. ஏற்கவில்லை. இதனால் அவர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் கிஷண் ரெட்டிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, அவர் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளார்.

Tags:    

Similar News