இந்தியா
பற்றி எரியும் காட்டுத்தீ - கோவாவில் களமிறங்கிய இந்திய விமானப் படை
- கடந்த 5ம் தேதி முதல் கோவாவின் வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
- கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது.
பனாஜி:
கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது.
கோவாவின் வனப்பகுதிகளில் கடந்த 5-ம் தேதி முதல் ஆங்காங்கே காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவாவில் இந்திய விமானப்படையும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளது. எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீ பரவும் பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகின.