இந்தியா

உயிருக்கு ஆபத்து என அச்சம்..!- தேஜ் பிரதாப் யாதவுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு

Published On 2025-11-09 13:39 IST   |   Update On 2025-11-09 13:39:00 IST
  • தேஜ் பிரதாப் ஜனசக்தி ஜனதாதளம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார்.
  • பீகார் தேர்தலில் தேஜ் பிரதாப் மகுவா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

ராஷ்டீரிய ஜனதாதள நிறுவனர் லல்லு பிரசாத் யாதவின் மகன்களில் ஒருவர் தேஜ்பிரதாப் யாதவ். இவர் கடந்த மே மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவர் ஜனசக்தி ஜனதாதளம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். பீகார் தேர்தலில் அவர் மகுவா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இதற்கிடையே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தேஜ்பிரதாப் யாதவ் அச்சம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

பீகார் தேர்தல் பிரசாரம் இன்று முடிவடையும் நிலையில் அவருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேஜ்பிரதாப் யாதவின் சகோதரரான தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஆவார்.

Tags:    

Similar News