உ.பி.யில் துணிகரம்: போலி போலீஸ் ஸ்டேஷன் நடத்திய மோசடி கும்பல் கைது
- போலீசாரின் சின்னங்களைப் பயன்படுத்தி பணம் பறித்தது தெரிய வந்தது.
- போலீசாரின் சின்னங்களைப் பயன்படுத்தி பணம் பறித்தது தெரிய வந்தது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரை காசியாபாத் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாக கூறியும், போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா பரிமாற்றம் செய்தும் வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், உ.பி.யின் நொய்டாவில் மோசடி கும்பல் ஒன்று சர்வதேச போலீஸ் நிலையம் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை அலுவலகம் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தர்.
விசாரணையில், அரசு அதிகாரிகளைப் போல நடித்தும், போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டைகள் மற்றும் போலீசாரின் சின்னங்களைப் பயன்படுத்தி பணம் பறித்ததும், அரசு ஊழியர்களைப் போல நடித்து www.intlpcrib.in என்ற இணையதளத்தின் மூலம் பணத்தை பெற்று வந்ததும் தெரிய வந்தது.