இந்தியா

பிரதமரே சிறை சென்றாலும்... தனக்கு எதிராகவே சட்டத் திருத்தத்தை மோடி கொண்டு வந்துள்ளார்- அமித் ஷா

Published On 2025-08-25 12:02 IST   |   Update On 2025-08-25 12:02:00 IST
  • முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும்
  • கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும்

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற வகையில் பதவி பறிப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முதல்வர்கள், அமைச்சர்கள், ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பதுதான் அந்த மசோதாவின் முக்கியம்சம். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், இந்த மசோதா குறித்து பேசிய அமித் ஷா, "பதவி பறிப்பு மசோதாவில் பிரதமர் பதவியையும் பிரதமர் மோடி சேர்த்துள்ளார். முன்னதாக, இந்திரா காந்தி 39வது திருத்தத்தை (ஜனாதிபதி, துணைத் தலைவர், பிரதமர் மற்றும் சபாநாயகரை இந்திய நீதிமன்றங்களின் நீதித்துறை மதிப்பாய்விலிருந்து பாதுகாப்பது) கொண்டு வந்தார்.

பிரதமர் சிறைக்குச் சென்றால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அரசியலமைப்புத் திருத்தத்தை நரேந்திர மோடி ஜி தனக்கு எதிராகக் கொண்டு வந்துள்ளார்

ஆனால் பிரதமரே சிறை சென்றாலும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற வகையில், தனக்கு எதிராகவே ஒரு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்துள்ளார் பிரதமர் மோடி" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News