இந்தியா

மணிப்பூரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

Published On 2023-09-12 00:45 IST   |   Update On 2023-09-12 00:45:00 IST
  • ஜூலை 21ம் தேதி அன்று உக்ருல் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • வங்கக் கடலில் நேற்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 11.1 மணியளவில் 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதமோ, பொருட் சேதமோ இதுவரை ஏற்படவில்லை.

இதேதேபால், கடந்த ஜூலை 21ம் தேதி அன்று உக்ருல் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

வங்கக் கடலில் நேற்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News