இந்தியா

நடுவர் மன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் - உச்ச நீதிமன்றம்

Published On 2025-04-30 16:13 IST   |   Update On 2025-04-30 16:13:00 IST
  • நடுவர் மன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது .
  • தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உட்பட 4 நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்டத்தின் (Arbitration and Conciliation Act) கீழ், நடுவர் மன்ற தீர்ப்புகளை திருத்தும் அதிகாரம் நீதிமன்றதிற்கு உள்ளதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆராய்ந்தது.

இது தொடர்பாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரித்தது. அதில், நடுவர் மன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உட்பட 4 நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவில், மத்தியஸ்த சட்டத்தின் பிரிவு 34 மற்றும் 37-ன் கீழ், நடுவர் மன்ற தீர்ப்புகளை முழுமையாக ரத்து செய்யாமல், தேவையான திருத்தங்களை செய்ய நீதிமன்றதிற்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், நீதிமன்றங்கள் நடுவர் மன்ற தீர்ப்புகளை மாற்ற முடியாது என்று நீதிபதி கே.வி. விஸ்வநாதன் தெரிவித்தார். 

Tags:    

Similar News