இந்தியா

கேட்டது ரூ.120.. போட்டது ரூ.720..! நியாயம் கேட்ட போலீசாரை வெளுத்து வாங்கிய பங்க் ஊழியர்கள்

Published On 2025-07-05 21:22 IST   |   Update On 2025-07-05 21:48:00 IST
  • பெட்ரோல் பங்க் ஊழியர் தவறுதலாக ரூ.720க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.
  • கடுங்கோபமடைந்த போலீசார், பங்க் ஊழியரை அறைந்துள்ளார்.

பீகார் மாநிலம், சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் போலீஸ் ஒருவர் வந்து தனது பைக்கில் ரூ.120க்கு பெட்ரோல் நிரப்ப சொல்லி இருக்கிறார்.

ஆனால், பெட்ரோல் பங்க் ஊழியர் தவறுதலாக ரூ.720க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.

இதனால், கடுங்கோபமடைந்த போலீசார், பங்க் ஊழியரை அறைந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், போலீசாரை சுற்றி வளைத்து தாக்கினர்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பின் மோதல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News