இந்தியா

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

Published On 2024-01-10 09:28 GMT   |   Update On 2024-01-10 09:40 GMT
  • ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என தகவல்.
  • ராகுல்காந்தி யாத்திரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரை தொடங்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ராகுல் காந்தி யாத்திரைக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மணிப்பூர் அரசு யாத்திரைக்கு அனுமதி மறுத்து வருகிறது. ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், " பெரும் அளவில் மக்கள் கூடுவதற்கு வழிவகுக்கும் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி இல்லை" என்றார்.

இதுகுறித்து, "காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "மணிப்பூரின் வேறு பகுதியில் ராகுல்காந்தி யாத்திரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்த இடம் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News