இந்தியா

காங்கிரஸ் எம்.பி. கீதா கோடா கட்சியில் இருந்து திடீர் விலகல்

Published On 2024-02-26 08:16 GMT   |   Update On 2024-02-26 08:16 GMT
  • ஜார்க்கண்ட் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் மதுகோடா.
  • இவரது மனைவியான கீதா கோடா இன்று காங்கிரசில் இருந்து விலகினார்.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2006-ம் ஆண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்த மதுகோடா காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல் மந்திரியாக பதவியேற்றார்.

மதுகோடாவின் மனைவி கீதா கோடா, டெல்லி சென்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது இவர் ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

இந்நிலையில், ஜார்க்கண்டின் சிங்பூர் தொகுதி எம்.பி.யான கீதா கோடா, இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட கூட்டணி குறித்த அதிருப்தியால் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News