பீகாரில் 6 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ்
- கடந்த 2020 தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
- தற்போது 61 இடங்களில் போட்டியிட்டு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றது. நேரம் செல்லசெல்ல இது உறுதிப்படுத்தப்பட்டது. ஏறக்குறைய அனைத்து தொதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலை விட நிதிஷ் குமார் கட்சி (ஐக்கிய ஜனத தளம்) இந்த முறை அதிகமான இடங்களை கைப்பற்றுகிறது. கடந்த முறை 43 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 85 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 61 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை லாலுவின் இந்த கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.