இந்தியா

நின்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து- 7 பேர் உயிரிழப்பு

Published On 2022-09-12 03:09 GMT   |   Update On 2022-09-12 03:09 GMT
  • மடாய் காட் அருகே இன்று அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
  • காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. மடாய் காட் அருகே இன்று அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக சென்று லாரி மீது மோதியதில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் நொறுங்கியது. விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News