இந்தியா

சிறுதானிய ஏற்றுமதியை ஊக்குவிக்க செயல் திட்டம்- மத்திய அரசு நடவடிக்கை

Published On 2022-11-11 08:16 IST   |   Update On 2022-11-11 08:16:00 IST
  • வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் சிறுதானியங்கள் விளம்பரப்படுத்தப்படும்.
  • பல்பொருள் அங்காடிகளை அடையாளம் கண்டு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்படும்.

புதுடெல்லி:

உலகம் முழுவதும் சிறுதானியங்கள் மற்றும் அவற்றால் செய்யப்படும் மதிப்பு கூட்டு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய வர்த்தக அமைச்சகம் ஒரு செயல் திட்டத்தை வகுத்துள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் சிறுதானியங்கள் விளம்பரப்படுத்தப்படும். பல்பொருள் அங்காடிகளை அடையாளம் கண்டு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்படும். விற்பவர்-வாங்குபவர் சந்திப்புகள் நடத்தி, விற்பனைக்கு வழிவகுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Tags:    

Similar News