இந்தியா

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய மருந்து கட்டுப்பாட்டாளர் கழக அதிகாரி கைது- சி.பி.ஐ. நடவடிக்கை

Published On 2022-06-21 07:45 GMT   |   Update On 2022-06-21 07:45 GMT
  • தனியார் நிறுவன நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • தினேசையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

புதுடெல்லி:

மருந்து கட்டுப்பாட்டாளர் கழக இணை அதிகாரியான ஈஸ்வர ரெட்டியை ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய போது சி.பி.ஐ. கைது செய்தது. தனியார் மற்றும் நிறுவனத்தின் 'இன்சூலின்' 3-ம் பரிசோதனைக்கு மருந்து அனுமதி வழங்க ஈஸ்வர ரெட்டிக்கு தினேஷ் என்பவர் லஞ்சம் கொடுத்த போது கையும், களவுமாக பிடித்தனர். தினேசையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் தனியார் நிறுவன நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை தனியார் நிறுவனம் மறுத்துள்ளது.

Tags:    

Similar News