இந்தியா

(கோப்பு படம்)

மூன்று முறை தள்ளி வைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெறுகிறது

Published On 2022-07-21 20:12 GMT   |   Update On 2022-07-21 21:40 GMT
  • இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என தகவல்
  • தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் பங்கேற்பு.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. இந்த கூட்டத்தில் கர்நாடகா கோரிக்கையை ஏற்று மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த கூட்டம் இரண்டு முறை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது.

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டத்தில், தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News