இந்தியா

பட்டாசு வெடிக்க எதிர்ப்பு தெரிவித்தவர் குத்திக்கொலை- சிறுவன் வெறிச்செயல்

Published On 2022-10-25 11:28 IST   |   Update On 2022-10-25 11:28:00 IST
  • பாட்டிலில் வைத்து பட்டாசு வெடிக்கக்கூடாது என கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களை கைது செய்தனர்.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கண்ணாடி பாட்டிலில் பட்டாசுகளை வைத்து வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவாஜி நகர் பரேக் காம்பவுண்டு அருகில் திறந்த வெளியில் 12 வயது சிறுவன் ஒருவன், கண்ணாடி பாட்டிலுக்குள் பட்டாசுகளை வைத்து வெடித்துக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த சுனில் நாயுடு (வயது 21) என்ற வாலிபர், சிறுவனிடம் சென்று இப்படி பாட்டிலில் வைத்து பட்டாசு வெடிக்கக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த சிறுவனுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் சேர, வாக்குவாதம் முற்றியது. சிறுவர்கள் சேர்ந்து சுனில் நாயுடுவை தாக்கி உள்ளனர். 15 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி உள்ளான். இதில் பலத்த காயமடைந்த சுனில் நாயுடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். ஒரு சிறுவனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News