இந்தியா

கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து- மீட்பு பணி தீவிரம்

Published On 2022-09-05 04:48 GMT   |   Update On 2022-09-05 10:26 GMT
  • படகு மூழ்கியதும் அதில் பயணித்தவர்களில் நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரையேறினர்.
  • மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பாட்னா:

பீகார் மாநிலம் தானாபூர் அருகே சுமார் 55 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, கங்கை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று காலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படகு மூழ்கத் தொடங்கியதும், படகில் இருந்தவர்களில் நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரையேறினர். நீச்சல் தெரியாதவர்கள் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 பேரை காணவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 படகுகளில் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News