இந்தியா

தொடர் வளர்ச்சி, ஊடுருவல்காரர்களை அகற்றுவதற்கான தேர்தல்: பீகாரில் வெற்றி எங்களுக்கே- ஜே.பி. நட்டா

Published On 2025-10-06 18:20 IST   |   Update On 2025-10-06 18:20:00 IST
  • பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்கள் நலன் மற்றும் நல்லாட்சியாக மாறியுள்ளது.
  • ஜனநாயகத்தின் தாயாகக் கருதப்படும் புனித பூமியான பீகார் பெருமளவிலான வாக்குகளையும் வழங்கும்.

பீகார் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜே.பி. நட்டா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பீகார் தேர்தல் மாநிலத்தின் தொடர் வளர்ச்சி, ஊடுருவல்காரர்களை அகற்றுதல், மீண்டும் காட்டு ராஜ்ஜியம் வருதை தடுப்பதற்கானது.

ஜனநாயகத்தின் தாயாகக் கருதப்படும் புனித பூமியான பீகார், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதன் ஆசீர்வாதங்களையும், பெருமளவிலான வாக்குகளையும் வழங்கும் என நாள் முழுமையான நம்புகிறேன்.

பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்கள் நலன் மற்றும் நல்லாட்சியாக மாறியுள்ளது.

இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் 2 கட்டங்காளக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று தேதி அறிவித்தது.

Tags:    

Similar News