இந்தியா
பாலியல் பலாத்கார முயற்சியில் நடந்த பயங்கரம்... கூடைப்பந்து வீராங்கனையை மாடியில் இருந்து தள்ளிவிட்ட இளைஞர்கள்
- பலாத்காரம் செய்ய வந்தவர்களுடன் போராடிய வீராங்கனை அங்கிருந்து தப்பி வர முயற்சித்துள்ளார்.
- எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு, 18 வயது நிரம்பிய வீராங்கனை ஒருவர் கடந்த 12ம் தேதி பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று இளைஞர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களுடன் போராடிய வீராங்கனை அங்கிருந்து தப்பி வர முயற்சித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், இளம்பெண்ணை மைதானத்தின் மாடியில் இருந்து தள்ளிவிட்டனர். அதில் அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. இரண்டு கால்களிலும் தாடையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செயது குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.