இந்தியா

இந்தியா வந்துள்ள பிரதமர் ஷேக் ஹசீனா

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகை - பிரதமர் மோடியை சந்திக்கிறார்

Published On 2022-09-05 13:27 GMT   |   Update On 2022-09-05 13:27 GMT
  • வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
  • இந்த பயணத்தில் இந்தியா வங்கதேசம் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

புதுடெல்லி:

வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேச உள்ளார்.

அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, நீர் மேலாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், மின்சாரம், எரிசக்தி துறை உள்பட பல்வேறு துறைகளில் உள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மோமன் கூறுகையில், வங்காளதேசம் தனது இலக்குகளை அடைவதற்கு, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள இந்த பயணம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என தங்கள் நாடு நம்புவதாக கூறினார்.

பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2019ம் ஆண்டு இந்தியா வந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

Tags:    

Similar News