இந்தியா

சிக்கிம், அருணாச்சல பிரதேசத்துக்கு ஏப்ரல் 19-ம் தேதி சட்டசபை தேர்தல்

Published On 2024-03-16 10:40 GMT   |   Update On 2024-03-16 10:43 GMT
  • ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.
  • வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலுடன் 4 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்களை ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News