இந்தியா

நக்சலைட் ஆதரவாளர் வீட்டில் சோதனை செய்துவிட்டு வெளியே வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்

ஆந்திராவில் நக்சலைட் ஆதரவாளர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை

Published On 2022-07-20 04:55 GMT   |   Update On 2022-07-20 04:55 GMT
  • பிரகாசம் மாவட்டம் அஜித் சிங் நகரில் உள்ள நக்சலைட் ஆதரவாளர் ஒருவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
  • சத்தீஸ்கர் வாலிபர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சந்தித்தார்களா என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மாவோயிஸ்டு ஆதரவாளர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

பிரகாசம் மாவட்டம் அஜித் சிங் நகரில் உள்ள நக்சலைட் ஆதரவாளர் ஒருவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்து சில டைரிகள், டிஜிட்டல் உபகரணங்கள், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். விஜயவாடாவில் உள்ள ஒரு வீட்டின் அருகே சத்தீஸ்கரைச் சேர்ந்த 4 வாலிபர்கள் தங்குவதற்கு இட வசதி அளிக்கப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர்.

சத்தீஸ்கர் வாலிபர்கள் அந்த வீட்டில் எவ்வளவு நாட்கள் தங்கினர். தடை செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சத்தீஸ்கர் வாலிபர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சந்தித்தார்களா போன்ற விவரங்களையும் அவர்கள் சேகரித்தனர். விஜயவாடாவில் ஒரு இடத்திலும், பிரகாசம் மாவட்டத்தில் 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

பிரகாசம் மாவட்டம் தங்குதூர் அருகே அழகுறபாடு என்ற இடத்தில் 3 வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், பேனர்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒரு சில டைரிகளை கைப்பற்றியதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

2019-ம் ஆண்டு சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தின் நகர்நார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கில் ஆந்திராவின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News