இந்தியா
பிரதமர் மோடிக்கு 2 முக்கிய பரிந்துரைகள் வழங்கிய ஆகாஷ் அம்பானி
- 2024 இந்தியா மொபைல் காங்கிரஸ் இன்று டெல்லியில் தொடங்கியது.
- இந்நிகழ்வில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார்.
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கிய 2024 இந்தியா மொபைல் காங்கிரஸை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 4 நாள் நடக்கக்கூடிய இந்த நிகழ்வு ஆசியாவிலேயே மிகப்பெரிய டெக் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்வில் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி பிரதமர் மோடி மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரிடம் 2 முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்தார்.
விழாவில் பேசிய ஆகாஷ் அம்பானி, AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் இந்திய பயனர்களின் டேட்டாக்களை சேமிக்க இந்தியாவில் டேட்டா மையங்களை உருவாக்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மிக வேகமாக வளர்ந்து வருவதால் டேட்டா சென்டர் பாலிசி 2020-ஐ மேம்படுத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்தார்.