இந்தியா

தெலுங்கானா அருகே தமிழ்நாடு ரெயிலில் திடீர் தீ விபத்து

Published On 2023-08-06 23:02 IST   |   Update On 2023-08-06 23:02:00 IST
  • சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு விரைவு ரெயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.
  • தெலுங்கானா மாநிலம் பேலம்பள்ளி அருகே வந்தபோது ஏசி பெட்டியின் சக்கரத்தில் தீப்பிடித்தது.

ஐதராபாத்:

தலைநகர் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு விரைவு ரெயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.

தெலுங்கானா மாநிலம் பேலம்பள்ளி அருகே வந்தபோது ஏ.சி. பெட்டியின் சக்கரத்தில் திடீரென தீ பிடித்தது.

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்பானைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து, ரெயில் மீண்டும் புறப்பட்டது.

தீ விபத்து காரணமாக ரெயில் தாமதமாக வந்துகொண்டிருக்கிறது

Tags:    

Similar News