இந்தியா

லிப்டில் 2 மணி நேரம் சிக்கிய சிறுவன்

Published On 2023-08-25 11:15 GMT   |   Update On 2023-08-25 11:15 GMT
  • 8 வயது சிறுவன் 4-வது மாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து லிப்டில் கீழே இறங்கி உள்ளார்.
  • இக்கட்டான நேரங்களில் பதட்டப்படவோ, பயப்படவோ கூடாது என எனது தந்தை கூறியிருக்கிறார்.

பெரியவர்கள் சிலருக்கு லிப்ட் பயம் இருப்பதை இப்போதும் காண முடிகிறது. இந்நிலையில் அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 8 வயது சிறுவன் 4-வது மாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து லிப்டில் கீழே இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் 2-வது மாடியில் சிக்கி கொண்டது. இதனால் சிறுவன் டியூசனுக்கு செல்லவில்லை. வழக்கமாக அந்த சிறுவனை தாயார் டியுசனுக்கு அழைத்து செல்வார். ஆனால் அன்றைய தினம் சிறுவன் டியூசனுக்கு வராதது குறித்து ஆசிரியர் கார்விட்டில் என்பவர் சிறுவனின் தந்தை பவான் சண்டிலாவுக்கு தகவல் தெரிவித்துள்ளர்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை தேடிய போது தான் சிறுவன் லிப்டுக்குள் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி லிப்டில் சிக்கிய சிறுவனை காப்பாற்றி உள்ளனர். மீட்புக்குழுவினர் மிகவும் பதட்டம் அடைந்து லிப்டுக்குள் சென்ற போது சிறுவனோ எந்த பதட்டமும் இல்லாமல் வீட்டு பாடம் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் சிறுவனிடம் கேட்ட போது, லிப்ட் பழுதாகி நின்றதும் எமர்ஜென்சி பட்டனை அழுத்தினேன். பின்னர் நீண்ட நேரம் கதவை தட்டினேன். ஆனால் யாரும் வரவில்லை. எனவே அமைதியாக எனது வீட்டு பாடத்தை எழுத தொடங்கினேன். இக்கட்டான நேரங்களில் பதட்டப்படவோ, பயப்படவோ கூடாது என எனது தந்தை கூறியிருக்கிறார். அதையே தான் பின்பற்றினேன் என அந்த சிறுவன் கூறினான்.

Tags:    

Similar News