இந்தியா

6-ம் கட்ட தேர்தல்: ஜனாதிபதி, மத்திய மந்திரிகள், வேட்பாளர்கள், பிரபலங்கள் வாக்களித்தனர்

Published On 2024-05-25 02:38 GMT   |   Update On 2024-05-25 04:00 GMT
  • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
  • அரியானா மாநில முதல்வர் நயப் சிங் சைனி தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

மக்களவை தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. டெல்லி, அரியானா, பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லியில் மத்திய மந்திரிகள், வேட்பாளர்கள், பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதேபோல் மற்ற மாநிலங்களிலும் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

அரியானா மாநில முதல்வர் நயப் சிங் சைனி தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

பா.ஜனதா வேட்பாளர் பன்சூரி ஸ்வராஜ் தனது வாக்கை பதிவு செய்தார்.

மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் கம்பிர் தனது வாக்கை பதிவு செய்தார்.

Tags:    

Similar News