இந்தியா

பிரான்ஸ் நாட்டில் நடக்கும் பன்னாட்டு விமான பயிற்சியில் பங்கேற்கும் 4 ரபேல் விமானங்கள்

Published On 2023-04-14 05:07 GMT   |   Update On 2023-04-14 05:10 GMT
  • வருகிற 17-ந் தேதி தொடங்கி மே மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.
  • 4 விமானங்களும், பயிற்சி பெறும் ராணுவ வீரர்களும் பிரான்சு நாட்டிற்கு இன்று புறப்படுகிறார்கள்.

புதுடெல்லி:

பிரான்ஸ் நாட்டில் பன்னாட்டு போர் விமானங்களின் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி வருகிற 17-ந் தேதி தொடங்கி மே மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சி முகாமில் இந்தியாவின் ரபேல் போர் விமானங்கள் கலந்து கொள்கின்றன.

இதற்காக இரண்டு சி 17 மற்றும் இரண்டு ஐஎல்-78 ரக ரபேல் விமானங்கள் அனுப்பபடுகிறது. இந்த 4 விமானங்களும், பயிற்சி பெறும் ராணுவ வீரர்களும் பிரான்சு நாட்டிற்கு இன்று புறப்படுகிறார்கள்.

Tags:    

Similar News