இந்தியா

ஜம்மு காஷ்மீர்: ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் பலி

Published On 2023-12-21 14:33 GMT   |   Update On 2023-12-21 14:33 GMT
  • ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
  • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள்மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் உடனடியாக பதிலடி கொடுத்தனர். அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவத்தினர் பலப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News