இந்தியா

அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த கார் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதியது- 3 பேர் பலி

Published On 2023-08-07 14:07 GMT   |   Update On 2023-08-07 14:07 GMT
  • விபத்தை ஏற்படுத்திய கார் உள்ளிட்ட 6 வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன.
  • கார் டிரைவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பனாஜி:

கோவா மாநிலம் பனாஜி அருகே இன்று அதிவேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற 3 கார்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. பாண்டா-பனாஜி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய கார் உள்ளிட்ட 6 வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன. ஸ்கூட்டரில் சென்ற கணவன், மனைவி, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கைது செய்தனர். அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tags:    

Similar News