குஜராத்தில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 27 பேர் பலி
- குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
- முன்னெச்சரிக்கையாக குஜராத்தின் பவ் நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜுனாகட், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், பவநகர், கட்ச், காந்தி நகர், சூரத் மற்றும் படான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு மீட்புப்படையினர் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் பவ் நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.