இந்தியா

தானேயில் 212 சட்டவிரோத குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Published On 2025-04-09 05:49 IST   |   Update On 2025-04-09 05:49:00 IST
  • குடிசைப்பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
  • தானேயில் மேலும் பல இடங்களில் சோதனை நடத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

தானே:

தானே மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக மும்ரா, திவா குடிசைப்பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில் தானே மாநகராட்சியினர் மும்ரா, திவா பகுதியில் 4 நாட்கள் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த 212 குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபோல தானேயில் மேலும் பல இடங்களில் சோதனை நடத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

Similar News