இந்தியா
சாலையில் வைத்து தாக்கப்படும் பெண்

ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை என மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்

Published On 2022-06-04 08:15 GMT   |   Update On 2022-06-04 08:15 GMT
அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், கணவர் உள்ளிட்ட குடும்பதினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி ஆண் குழந்தையை பெற்றுத் தராததால் அவரை அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில் பெண் கெஞ்சுகிறார். இருப்பினும் கணவரும், அவரது குடும்பத்தினரும் பெண்ணை உதைத்து தள்ளுகின்றனர். அவரை சராமரியாக குத்துகின்றனர். அந்த பெண் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும் அவர்கள் விடுவதாக இல்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்த பெண் கொடுத்த போலீசாரிடம் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது. 

என் கணவரும், அவரது குடும்பத்தினரும் ஆண் குழந்தை பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். ஆனால் எங்களுக்கு 2 பெண் குழந்தைகள்தான் பிறந்தது. இதனால் அவர்கள் என்னை அடித்து துன்புறுத்தினர். மன ரீதியாகவும் தொந்தரவு கொடுத்தனர்.

நான் கூலித்தொழிலாளியாக பணியாற்றுகிறேன். ஆனாலும் பலமுறை என்னை பட்டினி போட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த பெண் கூறினார்.

தற்போது படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், கணவர் உள்ளிட்ட குடும்பதினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News