இந்தியா
கைது

நடிகைகளுக்கு போதைபொருள் சப்ளை- திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவர் மகன் கைது

Published On 2022-05-27 12:29 IST   |   Update On 2022-05-27 12:29:00 IST
திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரின் மகன் போதைப்பொருள் சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் ஆதிகேசவலு நாயுடு. இவர் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவராக இருந்தார்.

இவரது மகன் சீனிவாஸ் (வயது 45). இவர் நேற்று ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் சென்றார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சீனிவாசனை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் பெங்களூரில் சதாசிவம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.

இதையடுத்து சீனிவாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

சீனிவாஸ் கைது குறித்து போலீசார் கூறுகையில்:-

ஐதராபாத் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சினிமா நடிகர், நடிகைகள் முக்கிய பிரமுகர்களுக்கு சீனிவாஸ் போதை பொருள் சப்ளை செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சீனிவாஸ் பிரவுன் சுகர் உள்ளிட்ட போதைபொருட்கள் சப்ளை செய்தது உறுதியானது.

இதையடுத்து அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரின் மகன் போதைப்பொருள் சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News