இந்தியா
இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்தது
நாடு முழுவதும் நேற்று 13,71,603 டோஸ்களும், இதுவரை 191 கோடியே 79 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
நேற்று முன்தினம் பாதிப்பு 1,569 ஆக இருந்தது. நேற்று 1,829 ஆக அதிகரித்த நிலையில், இன்று பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 596, டெல்லியில் 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் புதிய பாதிப்பு 307 ஆக உயர்ந்தது.
அரியானாவில் 257, உத்தரபிரதேசத்தில் 139, கர்நாடகாவில் 122 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 29 ஆயிரத்து 563 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் மேலும் 10 பேர் பலியாகி உள்ளனர். இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட 6 மரணங்கள் அடங்கும்.
இதுதவிர நேற்று ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,24,303 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2,582 பேர் நேற்று அதன் பாதிப்பில் இருந்து மீண்டனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 15,419 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 228 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 13,71,603 டோஸ்களும், இதுவரை 191 கோடியே 79 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
நேற்று முன்தினம் பாதிப்பு 1,569 ஆக இருந்தது. நேற்று 1,829 ஆக அதிகரித்த நிலையில், இன்று பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 596, டெல்லியில் 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் புதிய பாதிப்பு 307 ஆக உயர்ந்தது.
அரியானாவில் 257, உத்தரபிரதேசத்தில் 139, கர்நாடகாவில் 122 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 29 ஆயிரத்து 563 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் மேலும் 10 பேர் பலியாகி உள்ளனர். இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட 6 மரணங்கள் அடங்கும்.
இதுதவிர நேற்று ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,24,303 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2,582 பேர் நேற்று அதன் பாதிப்பில் இருந்து மீண்டனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 15,419 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 228 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 13,71,603 டோஸ்களும், இதுவரை 191 கோடியே 79 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று 4,77,570 மாதிரிகளும், இதுவரை மொத்தம் 84.54 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி - மந்திரிகள் குழு முடிவு