இந்தியா
உத்தவ் தாக்கரே

இந்துக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக சதி: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

Published On 2022-05-02 03:42 GMT   |   Update On 2022-05-02 03:42 GMT
இந்துத்வா கொள்கையை பின்பற்றுவது போல பாசாங்கு செய்பவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார்.
மும்பை :

மராட்டியத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா, தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கூட்டணியை முறித்து கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்த்து ஆட்சியமைத்தது.
 
அந்த நாள் முதல் சிவசேனாவுக்கு பா.ஜனதா நேரடியாகவும், மறைமுகமாகவும் குடைச்சலை கொடுத்து வருகிறது. சிவசேனா இந்துத்வா கொள்கையில் இருந்து விலகி செயல்படுவதாக கூறி, அந்த கருத்தை இந்து வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில் இந்துக்களிடையே பிளவை ஏற்படுத்த பா.ஜனதா சதி செய்வதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக கொங்கன் மண்டல சிவசேனா மாவட்ட தலைவர்களுடன் அவர் ஆன்லைனில் உரையாற்றியபோது பேசியதாவது:-

மேற்கு வங்காளம், கேரளாவில் செய்தது போல மராட்டியத்தை இந்து எதிர்ப்பு மாநிலமாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். மராட்டியத்தில் இந்துக்கள் இடையே பிளவை ஏற்படுத்த பா.ஜனதா சதி செய்கிறது. இதேபோல மராத்தியர்கள், மராத்தியர் அல்லாத மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் முனைப்பில் செயல்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்துத்வா கொள்கையை பின்பற்றுவது போல பாசாங்கு செய்பவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார். சிவசேனா முன் போலி இந்துத்வாவாதிகள் எதிர்த்து நிற்க முடியாது என்று நான் உறுதிபட கூறிக்கொள்கிறேன். விரைவில் மராட்டியத்தின் சில பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News