இந்தியா
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

கேள்வித் தாள் கசிவு இல்லாமல் ஒரே ஒரு தேர்வை நடத்திக் காட்டுங்கள்- குஜராத் முதல்வருக்கு கெஜ்ரிவால் சவால்

Published On 2022-05-01 09:33 GMT   |   Update On 2022-05-01 09:33 GMT
எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இந்த வாய்ப்பில் நான் பள்ளிகளை மேம்படுத்தவில்லை என்றால் நீங்கள் என்னை வெளியேற்றலாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வரும், ஆம் அத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து குஜராத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

குஜராத்தில் 6000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் பல பள்ளிகள் பாழடைந்த நிலையில் உள்ளன. லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் சீர்குலைந்துள்ளது. டெல்லியில் பள்ளிகளை மாற்றும் விதத்தில் குஜராத்தின் எதிர்காலத்தை மாற்றலாம்.

குஜராத்தில் தேர்வின்போது கேள்வி தாள் கசிந்ததில் பாஜக உலக சாதனை படைத்து வருகிறது. கேள்வி தாள் கசிவு இல்லாமல் ஒரே ஒரு தேர்வை நடத்திக் காட்டுமாறு குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு சவால் விடுகிறேன்.

குஜராத் மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இந்த வாய்ப்பில் நான் பள்ளிகளை மேம்படுத்தவில்லை என்றால் நீங்கள் என்னை வெளியேற்றலாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் அதிரடி மாற்றம்- 59 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள்
Tags:    

Similar News